பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக புதிய கைது உத்தரவு
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹ சீனாவை, கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தமது பதவியை இராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து யூனுஸ் தலைமையில் பங்களாதேஷில், இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, எதிராக இனப்படுகொலை மற்றும் பல ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அத்துடன், அவர் மீது தொடர்பான வழக்குகளில் ஷேக் ஹசீனா முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, பங்களாதேஷில் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
எனினும், ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பொதுத்தேர்தலில் வாக்களிக்கத் தடை விதித்தும், தேசிய அடையாள அட்டைகள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.