அவுஸ்திரேலியாவை நெருங்கும் பாரிய ஆபத்து: வெளியேறிய 2 லட்ச மக்கள்
அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரமான சிட்னியை புயலால் வெள்ளம் தாக்கியதால், சுமார் 200,000 மக்களை வெளியேற்றுமாறு ஆஸ்திரேலிய அவசர சேவைகள் உத்தரவிட்டுள்ளன.
5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மொத்தம் 400 கிலோமீட்டர் கடற்கரையை உள்ளடக்கிய பலத்த மழை மற்றும் புயல் எச்சரிக்கைகளை அவுஸ்திரேலியா அரசு அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
அவுஸ்திரேலியா அவசர சேவைகள் சுமார் 2,00,000 பேரை உடனடியாக தங்கள் வீடுகளை காலி செய்யுமாறும், 300,000 பேர் வெளியேற தயாராக இருக்குமாறும் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், புயல் அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரான சிட்னியை நோக்கி நகர்வதால், புயல் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக சிட்னி மற்றும் அவுஸ்திரேலியாவின் சுற்றுப்புற பகுதிகளில் 50 முதல் 150 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என்றும், இடியுடன் கூடிய மழையின் அளவு மாறுபடும் என்றும் நியூ சவுத் வேல்ஸ் வானிலை ஆய்வாளர் டீன் நரமோர் எச்சரிக்கிறார்.
இந்த புயல் சிட்னியின் நீர்த்தேக்கங்களை சேதப்படுத்தி பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.