வேகமெடுக்கும் கொரோனா; பாரம்பரிய முறைகளுக்கு தாவிய வடகொரிய மக்கள்!
வடகொரியாவில் யாரும் கொரோனா தடுப்பூசி செலுத்தாத நிலையில் கோரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது .
இந்நிலையில் கொரோனாவில் இருந்து தப்ப பாரம்பரிய வைத்திய முறைப்படி உப்பு தண்ணீரால் வாய் கொப்பளிப்பது,மூலிகை தேநீர் பருகுவது போன்றவற்றை வடகொரிய மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
வடகொரியாவில் இது வரை 8லட்சத்து 20ஆயிரம் பேர் காய்ச்சல் அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 3 நாட்களில் 42பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை நோயாளிகளை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மட்டும் அறிவுறுத்தப்படுடிருந்த நிலையில் தற்போது காய்ச்சல் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளுமாறு கிம் தலைமையிலான வடகொரிய அரசு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகின்றது.