6 ஆண்டுகள் பணிக்கு செல்லாமல் ஊதியம் பெற்ற நபர்; விருது கொடுக்க நினைத்தபோது தெரியவந்த உண்மை
ஆறு வருடங்கள் வேலை செய்யாமல், அலுவலகம் செல்லாமல், முழுச் சம்பளம் பெற்ற சம்பவமானது ஸ்பெயினின் காடிஸ் நகரில் அரங்கேறியுள்ளது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜோவாகின் கார்சியா என்ற நபர். காடிஸில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்தார். ஜோக்வின் கார்சியா 20 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
விருது கொடுக்க நினைத்தபோது தெரியவந்த உண்மை
அதன் பின்னர் திடீரென ஒரு நாள், ஜோவாகின் கார்சியா எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் மாயமானார். அவர் தனது வேலையை ராஜினாமா செய்யவில்லை, யாரிடமும் விடுமுறை சொல்லவில்லை. ஆனால் பணிக்கு வரவில்லை.
தி கார்டியனின் அறிக்கையின்படி, ஜோவாகின் கார்சியா 6 ஆண்டுகளாக வேலைக்கு வரவில்லை. எந்த வேலையும் செய்யவில்லை. ஆனால் முழு சம்பளத்தையும் தொடர்ந்து பெற்றார்.
ஜோவாகின் ஆண்டுக்கு 41,500 டாலர்கள். இது 6 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் ஜோவாகின் கார்சியாவை வேலைக்கு அமர்த்திய ஜார்ஜ் பிளாஸ் பெர்னாண்டஸ் கூறியதாவது, நீர் சுத்திகரிப்பு நிறுவனம் அவரைக் கண்காணித்து வருகிறது என்று நாங்கள் நினைத்தோம்.
ஆனால் அது அப்படி இல்லை. ஜோவாகின் கார்சியா அலுவலகத்தில் இல்லாதது ஒரு சுவாரஸ்யமான வழியில் தெரியவந்தது என்று கூறினார். அதாவது ஜோவாகின் கார்சியா 20 ஆண்டுகளாக நீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
30 ஆயிரம் டாலர்கள் அபராதம்
அவர் நிறுவனத்திடமிருந்து எந்த விருதும் பெறவில்லை. எனவே கார்சியாவின் விசுவாசத்திற்காக ஒரு விருதை வழங்க நிறுவனம் முடிவு செய்தது. இந்த விருது கொடுக்க தேடப்பட்ட போது தான், ஜோவாகின் கார்சியா 6 ஆண்டுகளாக வேலைக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் ஜோவாகின் கார்சியா 6 ஆண்டுகளாக வேலைக்கு வராதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து கார்சியாவிடம் கேட்கப்பட்டது. கார்சியாவின் வழக்கறிஞர்,
அவர் பணியின்போது துன்புறுத்தப்பட்டதாக கூறினார். அதனால் தான் அவர் அலுவலகத்திற்கு வரவில்லை என்றும் கூறினார். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றபோது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.
அதாவது, நீதிமன்றம் ஜோக்வின் கார்சியாவுக்கு 30 ஆயிரம் டாலர்கள் அபராதம் விதித்து உத்தரவிட்டது.